!-- Codes by HTML.am --> एकम् सत्यम् . विप्रा: बहुधा वदन्ति Truth is Unity. Scholars describe in many ways. அவன் ஒருவனே. படித்தவர் பல்விதமாக பகர்வர். स एक: (तैत्रॆय) तस्य वाचक: प्रणव:
ॐ असतो मा सद्गमय । तमसो मा ज्योतिर्गमय । मृत्योर्मा अमृतं गमय । ॐ शान्तिः शान्तिः शान्तिः ॥

OM..Sa Ekaha

एकम् सत्यम् . विप्रा: बहुधा वदन्ति
Truth is Unity. Scholars describe in many ways.
அவன் ஒருவனே. படித்தவர் பல்விதமாக பகர்வர்.
स एक: (तैत्रॆय) तस्य वाचक: प्रणव:
He is One (Taitreya Upanishad)
(And) His Verbal form is Pranavaha
===========================
पठत संस्कृतं वदत संस्कृतं
लसतु संस्कृतं चिरं गृहे गृहे च पुनरपि




A centre of Prayer and Meditation. இது ஒரு தியான மையம். இறைவ்னின் சன்னிதானம்.

A centre of Prayer and Meditation.   இது  ஒரு தியான மையம்.  இறைவ்னின் சன்னிதானம்.
Ganapathi Yanthra

THIS BLOG IS DEVOTED TO ORTHODOX, VEDIC CULTURE,TRADITIONS AND PHILOSOPHY OF HINDUISM

ஸத்யம்
சிவம்
சுந்தரம். .
ஆன்மீகம்
Satyam Shivam Sundaram
Aanmeekam

Peace resides in love of God.





Thursday, April 3, 2008

Sita Abducted ! Marichan killed..Rama meets Hanuman...

THESE ARE TRANSLATIONS FROM THE 108 VERSES OF SANKSHEPA RAMAYANA AS REVEALED BY SAGE NARADHA TO SAGE VALMIKI. IT IS STRONGLY ADVISED THAT DEVOTEES OF RAMA MAY PLEASE READ THIS PREFERABLY ONE OR TWO PER DAY, DEPENDING ON THEIR TIME AVAILABILITY.

PLEASE READ THIS NITHYA PARAYANA FROM THE BEGINNING.
THE FIRST CHAPTER COMMENCES FROM 28TH MARCH 2008.

அந்த மாரீசன் " ஓ இராவணா ! அந்த ஸ்ரீ ராமனுடைய பராக்கிரமத்தை ஜுஸத்தான யுத்தத்தில் கேட்டாயல்லவா? இனி நீ அந்த பெருமிடுக்கரோடு எதிர்ப்பது உனக்குரியது அன்று என்று சொல்லி
இராவணனைப் பலவிதமாகத் தடுத்தான்.

இயமனாலேவுண்ட இராவணன் அம்மாரீசனத்தைச் சட்டை செய்யாமலே ஸ்ரீ ராகவன் வீற்றிருக்கும்
ஆசிரமத்திற்கு மாரீசனைக் கூட்டிக்கொண்டு போனான்.

அங்கு அந்த மாரீசன் விசித்ரமான பொன் மான் உருவங்கொண்ட தன்னிடத்தில் ஆவலுற்றுப் பிடிக்க‌
முயன்ற ஸ்ரீ ராகவனையும் லக்ஷ்மணனையும் கைக்கு அகப்படாமல் வெகுதூரம் இழுத்துக் கொண்டு
போனான். அவ்விரு ராஜ குமாரர்களும் இல்லாத காலத்தில் இராவணன் புகுந்து ஸீதா தேவியை எடுத்துக் கொண்டு போகையில் அவளிடத்தில் பரிந்து வந்த ஜடாயுவையும் மடியச்செய்துவிட்டு அவளைத் தன் இலங்கைக்கு கொண்டு போய் விட்டான்.

பிறகு ஸ்ரீ ராகவன் வந்து ஸீதையைக் காணாமல், தேடிக்கொண்டே போகையில், குற்றுயிராய் அடிபட்டு
விழுந்திருக்கிற ஜடாயுவைப் பார்த்து ஸீதையை இராவணன் எடுத்துக்கொண்டு போனதாக அவர் சொல்லக் கேட்டு மிக்க வருத்தமுற்றவராய் இயங்கிப் பிரலாபித்தார்.

பிறகு ஜடாயுவுக்கு நேர்ந்த ஆபத்தை நினைந்துப் பெரும் துன்பம் உற்ற இராகவன் ஜடாயுவை தஹனம்
செய்துவிட்டு ஸீதையைத் தேடிக்கொண்டு போகையில் வழியில் பயங்கரமான உருவங்கொண்ட கபந்தன்
எனும் அரக்கனைப் பார்த்தார்.

இராகவன் அந்தக் கபந்தனைக் கொன்று தஹனம் செய்தார். அவன் ஸ்வர்க்கத்தை அடைந்தான்.

அந்தக் கபந்தன் ஸ்வர்க்கத்திற்குப் போகும்போது, " ஓ இராகவனே ! இவ்வழியே சென்றால் அங்கு
நல் ஒழுக்கமுடையவளாய் ஸன்யாஸ ஆச்ரமத்தில் ஒரு வேடுவப் பெண்மணி இருக்கிறாள். அவள் இருக்கும்
இடத்திற்கு நீர் செல்லும்" என்று சொன்னான்.

அடியாருடைய துன்பத்தைத் தொலைக்கவல்ல மிகுந்த புகழுடைய இராகவன் அந்த வேடுவப் பெண்மணி இருக்கும் இடம் சென்றார். ராஜகுமாரனாகிய இராகவனுக்கு அவ்வேடுவப்பெண்மணி சிறந்தவாறு பூசை செய்தாள்.

இராகவன் அங்கிருந்து சென்று பம்பை என்னும் ஸரஸ்ஸின் கரையில் ஹனுமான் என்கிற வானரத்தோடு
சேர்ந்தார்.

அந்த ஹனுமானுடைய சொற்படி இராகவன் சுக்ரீவனுடன் நேசித்தார்.