Showing posts with label HANUMAN. Show all posts
Showing posts with label HANUMAN. Show all posts
Saturday, December 24, 2011
Friday, April 4, 2008
" பார்த்தேன் ஸீதையை "

This Chapter of Sankshepa Ramayana reveals efforts of Hanuman in tracing Sita at Lanka, assuring Sita of the efforts of Sri Rama, burning Lanka, and getting back to Sri Rama to tell him of his successful mission.
வானர அதிபதியாகிய அந்த சுக்ரீவன் எல்லா வானரங்களையும் திரட்டிக் கொண்டு வந்து ஸீதா தேவியைத் தேடிக் கண்டுபிடிக்க எல்லாத் திசைகளுக்கும் அனுப்பினான்.
பிறகு, தெற்கு திசையை நோக்கிச் சென்ற ஹனுமான், ஸீதை இலங்கையில் இருப்பதி ஸம்பாதி சொல்லக் கேட்டு அங்கு போகக் கருதி, நூறு காதம் பரந்திருந்த கடலைத் தாண்டினார்.
அக்கரையில் இராவணன் பரிபாலித்து வருகிற இலங்காபுரியை அடைந்து அங்கு அசோக வனத்தில் எப்போதும் ஸ்ரீராமனையே தியானித்துக் கொண்டிருக்கிற ஸீதா தேவியைப் பார்த்தார்.
ஸீதா தேவிக்கு ராம நாம அங்கிதமான மோதிரத்தைக் கொடுத்து ஸ்ரீ ராகவன் ஸீதையை மீட்பதற்குச் செய்யப்படும் முயற்சியையும் தெரிவித்து சமாதானம் சொல்லி பிறகு இலங்கையின் கோட்டை வாசலை இடித்தார்.
அதைக்கேட்ட இராவணனால் ஏவி வந்த ஐந்து சேனாதிபதிகளையும் ஏழு மந்திரி குமாரர்களையும் சூரனான
அக்ஷணையும் கொன்றுவிட்டுப் பிறகு இந்திரஜித்து பிரயோகித்த பிரமாஸ்திரத்தினால் கட்டுண்டார்.
ஒரு முயற்சி இன்றியே பிரம தேவனுடைய வரத்தினால் தான் கட்டுண்ட அந்த அஸ்திரத்தின் கட்டு விடுபட்டுப் போனதை அறிந்த ஹனுமான், தன்னைக் கட்டியிழுக்கிற அரக்கர்களுடைய அபராதத்தைப் பொறுத்துக்கொண்டு பிறகு சீதை இருக்கும் இடம் தவிர மற்ற இலங்கையை முழுதும் கொளுத்திவிட்டு, ஸ்ரீராமனுக்கு ஸீதையைக்
கண்டதை ஆவலுடன் சொல்ல திரும்பி வந்தார்.
புத்திமானாகிய அந்த ஹனுமான் ஸ்ரீராமனிடம் வந்து அவரை வலம் வந்து " பார்த்தேன் ஸீதையை " என்று
சொல்லி அங்கு நடந்த கதையைச் சொன்னர்.
Labels:
HANUMAN,
kanden Sithaiyai,
raghava
Thursday, April 3, 2008
Sita Abducted ! Marichan killed..Rama meets Hanuman...
THESE ARE TRANSLATIONS FROM THE 108 VERSES OF SANKSHEPA RAMAYANA AS REVEALED BY SAGE NARADHA TO SAGE VALMIKI. IT IS STRONGLY ADVISED THAT DEVOTEES OF RAMA MAY PLEASE READ THIS PREFERABLY ONE OR TWO PER DAY, DEPENDING ON THEIR TIME AVAILABILITY.
PLEASE READ THIS NITHYA PARAYANA FROM THE BEGINNING.
THE FIRST CHAPTER COMMENCES FROM 28TH MARCH 2008.
அந்த மாரீசன் " ஓ இராவணா ! அந்த ஸ்ரீ ராமனுடைய பராக்கிரமத்தை ஜுஸத்தான யுத்தத்தில் கேட்டாயல்லவா? இனி நீ அந்த பெருமிடுக்கரோடு எதிர்ப்பது உனக்குரியது அன்று என்று சொல்லி
இராவணனைப் பலவிதமாகத் தடுத்தான்.
இயமனாலேவுண்ட இராவணன் அம்மாரீசனத்தைச் சட்டை செய்யாமலே ஸ்ரீ ராகவன் வீற்றிருக்கும்
ஆசிரமத்திற்கு மாரீசனைக் கூட்டிக்கொண்டு போனான்.
அங்கு அந்த மாரீசன் விசித்ரமான பொன் மான் உருவங்கொண்ட தன்னிடத்தில் ஆவலுற்றுப் பிடிக்க
முயன்ற ஸ்ரீ ராகவனையும் லக்ஷ்மணனையும் கைக்கு அகப்படாமல் வெகுதூரம் இழுத்துக் கொண்டு
போனான். அவ்விரு ராஜ குமாரர்களும் இல்லாத காலத்தில் இராவணன் புகுந்து ஸீதா தேவியை எடுத்துக் கொண்டு போகையில் அவளிடத்தில் பரிந்து வந்த ஜடாயுவையும் மடியச்செய்துவிட்டு அவளைத் தன் இலங்கைக்கு கொண்டு போய் விட்டான்.
பிறகு ஸ்ரீ ராகவன் வந்து ஸீதையைக் காணாமல், தேடிக்கொண்டே போகையில், குற்றுயிராய் அடிபட்டு
விழுந்திருக்கிற ஜடாயுவைப் பார்த்து ஸீதையை இராவணன் எடுத்துக்கொண்டு போனதாக அவர் சொல்லக் கேட்டு மிக்க வருத்தமுற்றவராய் இயங்கிப் பிரலாபித்தார்.
பிறகு ஜடாயுவுக்கு நேர்ந்த ஆபத்தை நினைந்துப் பெரும் துன்பம் உற்ற இராகவன் ஜடாயுவை தஹனம்
செய்துவிட்டு ஸீதையைத் தேடிக்கொண்டு போகையில் வழியில் பயங்கரமான உருவங்கொண்ட கபந்தன்
எனும் அரக்கனைப் பார்த்தார்.
இராகவன் அந்தக் கபந்தனைக் கொன்று தஹனம் செய்தார். அவன் ஸ்வர்க்கத்தை அடைந்தான்.
அந்தக் கபந்தன் ஸ்வர்க்கத்திற்குப் போகும்போது, " ஓ இராகவனே ! இவ்வழியே சென்றால் அங்கு
நல் ஒழுக்கமுடையவளாய் ஸன்யாஸ ஆச்ரமத்தில் ஒரு வேடுவப் பெண்மணி இருக்கிறாள். அவள் இருக்கும்
இடத்திற்கு நீர் செல்லும்" என்று சொன்னான்.
அடியாருடைய துன்பத்தைத் தொலைக்கவல்ல மிகுந்த புகழுடைய இராகவன் அந்த வேடுவப் பெண்மணி இருக்கும் இடம் சென்றார். ராஜகுமாரனாகிய இராகவனுக்கு அவ்வேடுவப்பெண்மணி சிறந்தவாறு பூசை செய்தாள்.
இராகவன் அங்கிருந்து சென்று பம்பை என்னும் ஸரஸ்ஸின் கரையில் ஹனுமான் என்கிற வானரத்தோடு
சேர்ந்தார்.
அந்த ஹனுமானுடைய சொற்படி இராகவன் சுக்ரீவனுடன் நேசித்தார்.
PLEASE READ THIS NITHYA PARAYANA FROM THE BEGINNING.
THE FIRST CHAPTER COMMENCES FROM 28TH MARCH 2008.
அந்த மாரீசன் " ஓ இராவணா ! அந்த ஸ்ரீ ராமனுடைய பராக்கிரமத்தை ஜுஸத்தான யுத்தத்தில் கேட்டாயல்லவா? இனி நீ அந்த பெருமிடுக்கரோடு எதிர்ப்பது உனக்குரியது அன்று என்று சொல்லி
இராவணனைப் பலவிதமாகத் தடுத்தான்.
இயமனாலேவுண்ட இராவணன் அம்மாரீசனத்தைச் சட்டை செய்யாமலே ஸ்ரீ ராகவன் வீற்றிருக்கும்
ஆசிரமத்திற்கு மாரீசனைக் கூட்டிக்கொண்டு போனான்.
அங்கு அந்த மாரீசன் விசித்ரமான பொன் மான் உருவங்கொண்ட தன்னிடத்தில் ஆவலுற்றுப் பிடிக்க
முயன்ற ஸ்ரீ ராகவனையும் லக்ஷ்மணனையும் கைக்கு அகப்படாமல் வெகுதூரம் இழுத்துக் கொண்டு
போனான். அவ்விரு ராஜ குமாரர்களும் இல்லாத காலத்தில் இராவணன் புகுந்து ஸீதா தேவியை எடுத்துக் கொண்டு போகையில் அவளிடத்தில் பரிந்து வந்த ஜடாயுவையும் மடியச்செய்துவிட்டு அவளைத் தன் இலங்கைக்கு கொண்டு போய் விட்டான்.
பிறகு ஸ்ரீ ராகவன் வந்து ஸீதையைக் காணாமல், தேடிக்கொண்டே போகையில், குற்றுயிராய் அடிபட்டு
விழுந்திருக்கிற ஜடாயுவைப் பார்த்து ஸீதையை இராவணன் எடுத்துக்கொண்டு போனதாக அவர் சொல்லக் கேட்டு மிக்க வருத்தமுற்றவராய் இயங்கிப் பிரலாபித்தார்.
பிறகு ஜடாயுவுக்கு நேர்ந்த ஆபத்தை நினைந்துப் பெரும் துன்பம் உற்ற இராகவன் ஜடாயுவை தஹனம்
செய்துவிட்டு ஸீதையைத் தேடிக்கொண்டு போகையில் வழியில் பயங்கரமான உருவங்கொண்ட கபந்தன்
எனும் அரக்கனைப் பார்த்தார்.
இராகவன் அந்தக் கபந்தனைக் கொன்று தஹனம் செய்தார். அவன் ஸ்வர்க்கத்தை அடைந்தான்.
அந்தக் கபந்தன் ஸ்வர்க்கத்திற்குப் போகும்போது, " ஓ இராகவனே ! இவ்வழியே சென்றால் அங்கு
நல் ஒழுக்கமுடையவளாய் ஸன்யாஸ ஆச்ரமத்தில் ஒரு வேடுவப் பெண்மணி இருக்கிறாள். அவள் இருக்கும்
இடத்திற்கு நீர் செல்லும்" என்று சொன்னான்.
அடியாருடைய துன்பத்தைத் தொலைக்கவல்ல மிகுந்த புகழுடைய இராகவன் அந்த வேடுவப் பெண்மணி இருக்கும் இடம் சென்றார். ராஜகுமாரனாகிய இராகவனுக்கு அவ்வேடுவப்பெண்மணி சிறந்தவாறு பூசை செய்தாள்.
இராகவன் அங்கிருந்து சென்று பம்பை என்னும் ஸரஸ்ஸின் கரையில் ஹனுமான் என்கிற வானரத்தோடு
சேர்ந்தார்.
அந்த ஹனுமானுடைய சொற்படி இராகவன் சுக்ரீவனுடன் நேசித்தார்.
Subscribe to:
Posts (Atom)
