Showing posts with label அஞ்ஞானத்தின் அடிப்படை.. Show all posts
Showing posts with label அஞ்ஞானத்தின் அடிப்படை.. Show all posts
Sunday, April 4, 2010
அஞ்ஞானத்தின் அடிப்படை.
அஞ்ஞானத்தின் அடிப்படை.
பகவான் ரமணரிடம் ஒருவர் வாதம் செய்ய வந்தார்.
வந்தவர்: ஆண்டவனுக்கு உருவம் ஏது ? அவரை உருவத்தில் தொழுவது தவறுதானே ?
பகவான்: அதிருக்கட்டும். உமக்கு உருவம் உண்டா ?
வந்தவர்: ஆம். இதோ தெரிகிறதே !!
பகவான்: மூன்றரை முழு உயரமும், கருப்பு நிறமும், மீசையும், தாடியுமாக இருக்கும் இது தான் நீரா ?
வந்தவர்: ஆம்.
பகவான்: தூங்கும்போது கூட இதுவேதானா ?
வந்தவர்: ஆம். ஏனெனின், விழித்துக்கொண்ட பின்னரும் நான் இப்படித்தானே இருக்கிறேன்.
பகவான்: உடம்பு செத்த பின்பும் நீர் இது தானா ?
வந்தவர்: ஆம்.
பகவான்: அப்படியானால், செத்த உடம்பை அடக்கம் செய்ய உறவினர்கள் வரும்போது, இந்த வீடு என்னுடையது, நான் இங்கேயே இருப்பேன். என்னை வெளியே கொண்டு போய் புதைக்கக்கூடாது என்று இந்த உடம்பு சொல்லுமா ?
அப்பொழுதுதான் வந்தவருக்குப் புரிகிறது. இவ்வுடல் நானல்ல. இதற்குள்ளிருக்கும் உயிர் நான் என்றார்.
பகவான் : இதுவரையில் உடம்பே நான் என்றிருந்தீர். இதுவே அடிப்படையான அஞ்ஞானம். இவ்வஞ்ஞானத்திலிருந்தே மற்றெல்லா அஞ்ஞானனங்களும் உண்டாகின்றன.
இந்த முதல் அஞ்ஞானம்அழியாதிருக்கும் வரையில் மற்ற அஞ்ஞானங்களும் தொடர்ந்து கொண்டே இருக்கும்.
Courtesy: Thirupathi Devasthana Panchangam.
Please click at the title to know more about Sage Ramana and His Thoughts.
Subscribe to:
Posts (Atom)
