!-- Codes by HTML.am --> एकम् सत्यम् . विप्रा: बहुधा वदन्ति Truth is Unity. Scholars describe in many ways. அவன் ஒருவனே. படித்தவர் பல்விதமாக பகர்வர். स एक: (तैत्रॆय) तस्य वाचक: प्रणव:
ॐ असतो मा सद्गमय । तमसो मा ज्योतिर्गमय । मृत्योर्मा अमृतं गमय । ॐ शान्तिः शान्तिः शान्तिः ॥

OM..Sa Ekaha

एकम् सत्यम् . विप्रा: बहुधा वदन्ति
Truth is Unity. Scholars describe in many ways.
அவன் ஒருவனே. படித்தவர் பல்விதமாக பகர்வர்.
स एक: (तैत्रॆय) तस्य वाचक: प्रणव:
He is One (Taitreya Upanishad)
(And) His Verbal form is Pranavaha
===========================
पठत संस्कृतं वदत संस्कृतं
लसतु संस्कृतं चिरं गृहे गृहे च पुनरपि




A centre of Prayer and Meditation. இது ஒரு தியான மையம். இறைவ்னின் சன்னிதானம்.

A centre of Prayer and Meditation.   இது  ஒரு தியான மையம்.  இறைவ்னின் சன்னிதானம்.
Ganapathi Yanthra

THIS BLOG IS DEVOTED TO ORTHODOX, VEDIC CULTURE,TRADITIONS AND PHILOSOPHY OF HINDUISM

ஸத்யம்
சிவம்
சுந்தரம். .
ஆன்மீகம்
Satyam Shivam Sundaram
Aanmeekam

Peace resides in love of God.





Tuesday, April 1, 2008

பரதன் ஸ்ரீ ராமனுடைய பாதுகைகளை சேவித்துக்கொண்டு,.....

Chapter 4.
In today’s parayana, are included
The Demise of King Dasaratha
Bharatha requesting Rama to return to Ayodya.
Sri Rama handing his Padukas with His advice.


ஸ்ரீ ராகவன் சித்ரகூடம் சேர்ந்த அதே தருணத்தில், தசரத மஹாராஜன் புத்திர சோகத்தின் மேலீட்டினால் பிள்ளையையே நினைத்து நினைத்து அழுது அழுது ஸ்வர்க்கத்தை அடைந்தார்.

தசரத மஹாராஜன் ஸ்வர்க்க லோகத்தை அடைந்தபின், அவனுக்கு மற்றொரு பிள்ளையாகிய பரதனை, வசிஷ்டர் முதலாகிய பெரியோர்கள் இராஜ்ய பட்டாபிஷேகம் செய்துகொள்ள நியமித்தாலும், பரதன் அரசை ஆள சாமர்த்தியவானாக இருந்தும், ராஜ்யத்தை விரும்பவில்லை.

அந்த பரதன், ஸ்ரீ ராகவனைக் கண்டு அவரைத் திரும்பவும் நாட்டுக்கு கொண்டுவருவதற்காக, நால்வகை சேனைகளுடன் ஸ்ரீ ராமன் இருக்கும் காட்டுக்கு சென்றார்.

பரதன் காட்டுக்குச் சென்று எல்லோரும் கொண்டாடும் வகையில் நல் ஒழுக்கமுடையவராய் மனதில் கலக்கமற்றவராய் சொன்ன சொல் தவறாதவராய் தன்னுடைய தமையன் ஸ்ரீ ராமனிடம் தன் விருப்பத்தைச்சொல்லி வேண்டினார்.

(அதாவது) ஓ ஸ்ரீ ராகவனே ! நீர் தசரத மஹாராஜனின் மூத்த பிள்ளையாகையால், நீரே இந்த ராஜ்யத்தை ஆள வேண்டுமென சொன்னார்.

ஆயினும், ஸ்ரீ ராகவன், அடியார்கள் இரந்ததை எல்லாம் கொடுக்கவல்ல சுபாவத்தை உடையவர் எனினும், அடியார்கள் இரப்பைக் கண்டு வேண்டுபவற்றைக் கொடுப்பவர் ஆயினும், கொடையில் பெரும் புகழை உடையவர் ஆயினும், தந்தை இட்ட கட்டளைதனை தவறக்கூடாதென நிச்சயித்து, பரதன் கோரிக்கைபடி, ராஜ்யத்தை
விரும்பவில்லை.

ஸ்ரீ ராகவன் இராஜ்யத்தில் தனக்குப் பதிலாக தன்னுடைய பாதுகைகளை வைத்துக்கொள்ளச் சொன்னார். சொன்ன பிறகும் தன்னை விட்டுப் போகாமல், அங்கேயே நிற்கிற பரதனுக்கு அனேக சமாதானங்களைச் சொல்லி அயோத்திக்கு அனுப்பிவிட்டார்.

அந்த பரதன் தன் கோரிக்கைதனை அடையாமல் ஸ்ரீ ராமனுடைய பாதுகைகளை தினந்தோறும் சேவித்துக்கொண்டு, ஸ்ரீராமன் திரும்பி வரும் காலத்தை எதிர்பார்த்துக் கொண்டு அருகில் இருக்கிற நந்திகிராமத்தில் இருந்து ராஜ்ய பரிபாலனம் நடத்தி வந்தார்.

Note:
This is from Sankshepa Ramayana consisting of 100 Slokas as revealed by Sage Narada to Sage Valmiki . (Those desirous of going the Valmiki Ramayana in its entirety are advised to click at the link given at the right side)
This script is for daily parayana.
Those desirous of doing nithya parayana are humbly requested to start from the FIRST CHAPTER which has commenced on 28th March 2008.
Ramaya Rama bhadhraya Ramachandraya Vedhase
Raghunathaya nathaaya Sithaaya pathayE namaha.