!-- Codes by HTML.am --> एकम् सत्यम् . विप्रा: बहुधा वदन्ति Truth is Unity. Scholars describe in many ways. அவன் ஒருவனே. படித்தவர் பல்விதமாக பகர்வர். स एक: (तैत्रॆय) तस्य वाचक: प्रणव:
ॐ असतो मा सद्गमय । तमसो मा ज्योतिर्गमय । मृत्योर्मा अमृतं गमय । ॐ शान्तिः शान्तिः शान्तिः ॥

OM..Sa Ekaha

एकम् सत्यम् . विप्रा: बहुधा वदन्ति
Truth is Unity. Scholars describe in many ways.
அவன் ஒருவனே. படித்தவர் பல்விதமாக பகர்வர்.
स एक: (तैत्रॆय) तस्य वाचक: प्रणव:
He is One (Taitreya Upanishad)
(And) His Verbal form is Pranavaha
===========================
पठत संस्कृतं वदत संस्कृतं
लसतु संस्कृतं चिरं गृहे गृहे च पुनरपि




A centre of Prayer and Meditation. இது ஒரு தியான மையம். இறைவ்னின் சன்னிதானம்.

A centre of Prayer and Meditation.   இது  ஒரு தியான மையம்.  இறைவ்னின் சன்னிதானம்.
Ganapathi Yanthra

THIS BLOG IS DEVOTED TO ORTHODOX, VEDIC CULTURE,TRADITIONS AND PHILOSOPHY OF HINDUISM

ஸத்யம்
சிவம்
சுந்தரம். .
ஆன்மீகம்
Satyam Shivam Sundaram
Aanmeekam

Peace resides in love of God.





Sunday, April 17, 2011

அப்போதைக்கு இப்போதே



அப்போதைக்கு இப்போதே சொல்லிவைத்தேன் என்று
அரங்கத்தரவணைப் பள்ளியானைத் தொழுதல்

எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்

துப்புடையாரை அடைவதெல்லாம் சோர்விடத்துத் துணையாவ ரென்றே*
ஒப்பிலேனாகிலும் நின்னடைந்தேன் ஆனைக்குநீ அருள்செய் தமையால்*
எய்ப்புஎன்னை வந்துநலியும்போது அங்குஏதும் நானுன்னை நினைக்க மாட்டேன்*
அப்போதைக்கு இப்போதே சொல்லிவைத்தேன் அரங்கத் தரவணைப் பள்ளியானே ! 1

சாமிடத்து என்னைக் குறிக்கொள் கண்டாய் சங்கொடு சக்கர மேந்தினானே!*
நாமடித்து என்னை அனேக தண்டம் செய்வதா நிற்பர் நமன்தமர்கள்*
போமிடத்து உன்திறத்து எத்தனையும் புகாவண்ணம் நிற்பதோர் மாயை வல்லை*
ஆமிடத்தே உன்னைச் சொல்லிவைத்தேன் அரங்கத் தரவணைப் பள்ளியானே! 2

எல்லையில் வாசல் குறுகச் சென்றால் எற்றி நமன்தமர் பற்றும் போது*
நில்லுமின் என்னும் உபாயமில்லை நேமியும் சங்கமும் ஏந்தினானே!*
சொல்லலாம் போதே உன்நாமமெல்லாம் சொல்லினேன் என்னைக் குறிக்கொண்டு என்றும்*
அல்லல் படாவண்ணம் காக்க வேண்டும் அரங்கத் தரவணைப் பள்ளியானே! 3

ஒற்றை விடையனும் நான்முகனும் உன்னை யறியாப் பெருமையோனே!*
முற்ற உலகெல்லாம் நீயேயாகி மூன்றெழுத் தாய முதல்வனேயோ!*
அற்றது வாணாள் இவற்கென் றெண்ணி அஞ்ச நமன்தமர் பற்றலுற்ற*
அற்றைக்கு, நீஎன்னைக் காக்க வேண்டும் அரங்கத் தரவணைப் பள்ளியானே! 4

பையர வினணைப் பாற்கடலுள் பள்ளி கொள்கின்ற பரம மூர்த்தி!*
உய்யஉலகு படைக்க வேண்டி உந்தியில் தோற்றினாய் நான்முகனை*
வைய மனிசரைப் பொய்யென் றெண்ணிக் காலனையும் உடனே படைத்தாய்*
ஐய! இனிஎன்னைக் காக்க வேண்டும் அரங்கத் தரவணைப் பள்ளியானே! 5

தண்ணென வில்லை நமன்தமர்கள் சாலக் கொடுமைகள் செய்யாநிற்பர்*
மண்ணொடு நீரும் எரியும் காலும் மற்றும் ஆகாசமு மாகி நின்றாய்!
எண்ணலாம் போதே உன்நாம மெல்லாம் எண்ணினேன், என்னைக் குறிக்கொண்டு என்றும்*
அண்ணலே! நீஎன்னைக் காக்க வேண்டும் அரங்கத் தரவணைப் பள்ளியானே! 6

செஞ்சொல் மறைப்பொரு ளாகி நின்ற தேவர்கள் நாயகனே! எம்மானே!*
எஞ்சலி லென்னுடை யின்னமுதே! ஏழுலகும் உடையாய்! என்னப்பா!*
வஞ்ச வுருவின் நமன்தமர்கள் வலிந்து நலிந்து என்னைப் பற்றும் போது*
அஞ்சல மென்றுஎன்னைக் காக்க வேண்டும் அரங்கத் தரவணைப் பள்ளியானே! 7

நான்ஏதும் உன்மாய மொன்றறியேன் நமன்தமர் பற்றி நலிந்திட்டு* இந்த
ஊனேபுகே யென்று மோதும் போது அங்கேதும் நான்உன்னை நினைக்க மாட்டேன்*
வானேய் வானவர் தங்களீசா! மதுரைப் பிறந்த மாமாயனே!* என்
ஆனாய்! நீஎன்னைக் காக்க வேண்டும் அரங்கத் தரவணைப் பள்ளியானே! 8

குன்றெடுத்து ஆநிரை காத்த ஆயா கோநிரை மேய்த்தவனே! எம்மானே!*
அன்றுமுதல் இன்றறுதியா ஆதியஞ் சோதி! மறந்தறியேன்*
நன்றும் கொடிய நமன்தமர்கள் நலிந்து வலிந்து என்னைப் பற்றும்போது*
அன்றங்கு நீஎன்னைக் காக்க வேண்டும் அரங்கத் தரவணைப் பள்ளியானே! 9

மாயவனை மதுசூதனனை மாதவனை மறையோர்கள் ஏத்தும்*
ஆயர்கள் ஏற்றினை அச்சுதனை அரங்கத் தரவணைப் பள்ளியானை*
வேயர்புகழ் வில்லிபுத்தூர்மன் விட்டுசித்தன் சொன்ன மாலைபத்தும்*
தூய மனத்தனராகி வல்லார் தூமணி வண்ணனுக் காளர்தாமே. 10

பெரியாழ்வார் திருவடிகளே சரணம்