!-- Codes by HTML.am --> एकम् सत्यम् . विप्रा: बहुधा वदन्ति Truth is Unity. Scholars describe in many ways. அவன் ஒருவனே. படித்தவர் பல்விதமாக பகர்வர். स एक: (तैत्रॆय) तस्य वाचक: प्रणव:
ॐ असतो मा सद्गमय । तमसो मा ज्योतिर्गमय । मृत्योर्मा अमृतं गमय । ॐ शान्तिः शान्तिः शान्तिः ॥

OM..Sa Ekaha

एकम् सत्यम् . विप्रा: बहुधा वदन्ति
Truth is Unity. Scholars describe in many ways.
அவன் ஒருவனே. படித்தவர் பல்விதமாக பகர்வர்.
स एक: (तैत्रॆय) तस्य वाचक: प्रणव:
He is One (Taitreya Upanishad)
(And) His Verbal form is Pranavaha
===========================
पठत संस्कृतं वदत संस्कृतं
लसतु संस्कृतं चिरं गृहे गृहे च पुनरपि




A centre of Prayer and Meditation. இது ஒரு தியான மையம். இறைவ்னின் சன்னிதானம்.

A centre of Prayer and Meditation.   இது  ஒரு தியான மையம்.  இறைவ்னின் சன்னிதானம்.
Ganapathi Yanthra

THIS BLOG IS DEVOTED TO ORTHODOX, VEDIC CULTURE,TRADITIONS AND PHILOSOPHY OF HINDUISM

ஸத்யம்
சிவம்
சுந்தரம். .
ஆன்மீகம்
Satyam Shivam Sundaram
Aanmeekam

Peace resides in love of God.





Wednesday, December 22, 2010

‌பகவத் கீதையின் எட்டாவது அத்தியாயம் பத்தாவது ஸ்லோகம்


ப்ரயாணகாலே மனஸாசலே ந பக்த்யா யுக்தோ யோக பலே ந சைவ‌
 ப்ருவோர்மத்யே ப்ராணமாவேச்ய ஸ தம் பரம் புருஷமுபைதி திவ்யம் 



प्रयाण काले मनसाचलेन भक्त्या युक्तो योगबलेन चैव 
भ्रुवोर्मध्ये प्राणमावेश्य सम्यक स तम परम पुरुषमुपैति दिव्यं 


   பக்தியுடன் கூடிய அந்த மனிதன் இறக்கும் நேரத்திலும் யோகத்தின் வலிமையால், புருவங்களின் மத்தியில்  ப்ராணனை நன்றாக நிலை நிறுத்தி மேலும் அசையாத மனதால் நினைத்துக்கொண்டு அந்த திவ்ய ரூபத்தோடு கூடிய‌     மேலான புருஷணான பரமாத்மாவையே அடைகிறான்.

   ' பக்த்யா யுக்த" என்றால் ?

   பக்வானிடம் வைக்கும் அன்பே பக்தி.  யாரிடம் அன்பு இருக்கிறதோ, அவரிடம்
 பக்தியும் உண்டாகும். இங்கு  நிர்குண நிராகார ப்ரம்மமே நான் எனச் செய்யப்படும் அஹம்க்ரஹ உபாசனை.  இங்கு  ஞானயோகம் பற்றிய‌ பேச்சு இல்லை. 

   யோக பலம் ?

   அப்யாச யோகம் இங்கு சொல்லப்படும் யோகம். ப்ராணனை அடக்குவதுதான் யோக பலம்.     புருவங்களின் மத்தியில் ஆக்ஞா சக்ரம் உள்ளது. இரு இதழ்களை உடையது.  இந்த சக்கரத்தின் அருகில் ஏழு  கோசங்கள்:  இந்து, போதினி, நாதம், அர்த்த சந்திரிகை, மஹா நாதம், கலை, உன்மனீ  என்பன.  ப்ராணன்களின்  வழியாக உன்மணி கோசத்தை அடைந்த ஜீவன் பரமாத்மாவை அடைவான். அவன் பின் பிறப்பெடுப்பது தடுக்கப்பட்டு விடுகிறது.

   அசையாத மனம் என்றால் என்ன ?
   நா ந்ய காமி என்ற சொல்லின் பொருள் தான் அசைவற்ற மனம்.  த்யானிக்கும்
பொருளில் ஊன்றி விடும்பொழுது    மனம் அதை விட்டு நகருவதில்லை. அசைவதில்லை.