!-- Codes by HTML.am --> एकम् सत्यम् . विप्रा: बहुधा वदन्ति Truth is Unity. Scholars describe in many ways. அவன் ஒருவனே. படித்தவர் பல்விதமாக பகர்வர். स एक: (तैत्रॆय) तस्य वाचक: प्रणव:
ॐ असतो मा सद्गमय । तमसो मा ज्योतिर्गमय । मृत्योर्मा अमृतं गमय । ॐ शान्तिः शान्तिः शान्तिः ॥

OM..Sa Ekaha

एकम् सत्यम् . विप्रा: बहुधा वदन्ति
Truth is Unity. Scholars describe in many ways.
அவன் ஒருவனே. படித்தவர் பல்விதமாக பகர்வர்.
स एक: (तैत्रॆय) तस्य वाचक: प्रणव:
He is One (Taitreya Upanishad)
(And) His Verbal form is Pranavaha
===========================
पठत संस्कृतं वदत संस्कृतं
लसतु संस्कृतं चिरं गृहे गृहे च पुनरपि




A centre of Prayer and Meditation. இது ஒரு தியான மையம். இறைவ்னின் சன்னிதானம்.

A centre of Prayer and Meditation.   இது  ஒரு தியான மையம்.  இறைவ்னின் சன்னிதானம்.
Ganapathi Yanthra

THIS BLOG IS DEVOTED TO ORTHODOX, VEDIC CULTURE,TRADITIONS AND PHILOSOPHY OF HINDUISM

ஸத்யம்
சிவம்
சுந்தரம். .
ஆன்மீகம்
Satyam Shivam Sundaram
Aanmeekam

Peace resides in love of God.





Sunday, April 4, 2010

அஞ்ஞானத்தின் அடிப்படை.


அஞ்ஞானத்தின் அடிப்படை.

பகவான் ரமணரிடம் ஒருவர் வாதம் செய்ய வந்தார்.

வந்தவர்: ஆண்டவனுக்கு உருவம் ஏது ? அவரை உருவத்தில் தொழுவது தவறுதானே ?

பகவான்: அதிருக்கட்டும். உமக்கு உருவம் உண்டா ?

வந்தவர்: ஆம். இதோ தெரிகிறதே !!

பகவான்: மூன்றரை முழு உயரமும், கருப்பு நிறமும், மீசையும், தாடியுமாக இருக்கும் இது தான் நீரா ?

வந்தவர்: ஆம்.

பகவான்: தூங்கும்போது கூட இதுவேதானா ?

வந்தவர்: ஆம். ஏனெனின், விழித்துக்கொண்ட பின்னரும் நான் இப்படித்தானே இருக்கிறேன்.

பகவான்: உடம்பு செத்த பின்பும் நீர் இது தானா ?

வந்தவர்: ஆம்.

பகவான்: அப்படியானால், செத்த உடம்பை அடக்கம் செய்ய உறவினர்கள் வரும்போது, இந்த வீடு என்னுடையது, நான் இங்கேயே இருப்பேன். என்னை வெளியே கொண்டு போய் புதைக்கக்கூடாது என்று இந்த உடம்பு சொல்லுமா ?

அப்பொழுதுதான் வந்தவருக்குப் புரிகிறது. இவ்வுடல் நானல்ல. இதற்குள்ளிருக்கும் உயிர் நான் என்றார்.

பகவான் : இதுவரையில் உடம்பே நான் என்றிருந்தீர். இதுவே அடிப்படையான அஞ்ஞானம். இவ்வஞ்ஞானத்திலிருந்தே மற்றெல்லா அஞ்ஞானனங்களும் உண்டாகின்றன.

இந்த முதல் அஞ்ஞானம்அழியாதிருக்கும் வரையில் மற்ற அஞ்ஞானங்களும் தொடர்ந்து கொண்டே இருக்கும்.

Courtesy: Thirupathi Devasthana Panchangam.

Please click at the title to know more about Sage Ramana and His Thoughts.