!-- Codes by HTML.am --> एकम् सत्यम् . विप्रा: बहुधा वदन्ति Truth is Unity. Scholars describe in many ways. அவன் ஒருவனே. படித்தவர் பல்விதமாக பகர்வர். स एक: (तैत्रॆय) तस्य वाचक: प्रणव:
ॐ असतो मा सद्गमय । तमसो मा ज्योतिर्गमय । मृत्योर्मा अमृतं गमय । ॐ शान्तिः शान्तिः शान्तिः ॥

OM..Sa Ekaha

एकम् सत्यम् . विप्रा: बहुधा वदन्ति
Truth is Unity. Scholars describe in many ways.
அவன் ஒருவனே. படித்தவர் பல்விதமாக பகர்வர்.
स एक: (तैत्रॆय) तस्य वाचक: प्रणव:
He is One (Taitreya Upanishad)
(And) His Verbal form is Pranavaha
===========================
पठत संस्कृतं वदत संस्कृतं
लसतु संस्कृतं चिरं गृहे गृहे च पुनरपि




A centre of Prayer and Meditation. இது ஒரு தியான மையம். இறைவ்னின் சன்னிதானம்.

A centre of Prayer and Meditation.   இது  ஒரு தியான மையம்.  இறைவ்னின் சன்னிதானம்.
Ganapathi Yanthra

THIS BLOG IS DEVOTED TO ORTHODOX, VEDIC CULTURE,TRADITIONS AND PHILOSOPHY OF HINDUISM

ஸத்யம்
சிவம்
சுந்தரம். .
ஆன்மீகம்
Satyam Shivam Sundaram
Aanmeekam

Peace resides in love of God.





Friday, February 20, 2009

மரகத வடிவே சரணம் சரணம்






PLEASE CLICK AT THE TITLE OF THIS POSTING TO MOVE ON TO SRI KUMARAN'S BLOG.

COURTESY: SRI KUMARAN.
PORTRAYING
LALITHAMBIKAI AS MARAGHATHAM GEM
மரகத வடிவே சரணம் சரணம்
மதுரித பதமே சரணம் சரணம்
சுரபதி பணியத் திகழ்வாய் சரணம்
சுதிஜதிலயமே இசையே சரணம்
ஹர ஹர சிவ என்று அடியவர் குழும
அவர் அருள் பெற அருள் அமுதே சரணம்
வர நவநிதியே ச்ரணம் சரணம்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே

கண்ணுக்குக் குளிர்ச்சியான நிறம் பச்சை நிறம். அதிலும் மரகதப்பச்சை மிக மிக இனிமையானது. செம்மை நிற மாணிக்க ஒளிக்கதிராக விளங்கும் அன்னை அதே நேரத்தில் மரகத வடிவிலும் திகழ்கின்றாள். மரகத வடிவே சரணம் சரணம்.

என்றைக்கும் நிலையான வாழ்வைத் தருவன அவளது திருவடிகள். மாசில் வீணையும் மாலை மதியமும் வீசு தென்றலும் வீங்கிள வேனிலும் மூசுவண்டறை பொய்கையும் போன்றதே தேன் பொழியும் அத்தாமரைத் திருவடிகள். மதுரித பதமே சரணம் சரணம்.

இப்பிரம்மாண்டத்தில் நல்லதும் தீயதுமாக பல இயற்கைச் சக்திகள் இருக்கின்றன. நல்ல சக்திகள் சுரர்களாகப் போற்றப்படுகின்றனர். அவர்களின் தலைவன் சுரபதி. அந்த சுரபதி போற்றும் திருவடிகளைக் கொண்டவள் அன்னை. சுரபதி பணியத் திகழ்வாய் சரணம்.

இவ்வுலகங்களை எல்லாம் ஈன்றவள் அன்னை. அவள் இசை வடிவானவள். முதல் ஒலியான ஓம்கார வடிவானவள். இந்த இசை சுதி, ஜதி, லயம் என்ற பாகங்களைக் கொண்டது. அந்த பாகங்களின் வடிவாக விளங்குகிறாள் அன்னை. சுதி ஜதி லயமே இசையே சரணம்.

ஹரஹரோஹரா என்று அடியவர்கள் ஒன்று கூடி வணங்கும் போது அவர்கள் இறையருளைப் பெறுவதற்கு அருள் புரிபவள் அன்னை. அவள் அருள் செய்தால் தானே அடியவர்கள் அவன் தாள் வணங்குதல் இயலும். ஹர ஹர சிவ என்று அடியவர் குழும அவர் அருள் பெற அருள் அமுதே சரணம்.

உலகத்தில் இருக்கும் எல்லாவித செல்வங்களும் அருளுபவள் அன்னை. அச்செல்வங்களின் வடிவாக விளங்குபவள் அன்னை. வர நவநிதியே சரணம் சரணம்.

மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே.
Posted by குமரன் (Kumaran)
Kindly log on to: http://ammanpaattu.blogspot.com
to view all the stanzas with meaning in Tamil