!-- Codes by HTML.am --> एकम् सत्यम् . विप्रा: बहुधा वदन्ति Truth is Unity. Scholars describe in many ways. அவன் ஒருவனே. படித்தவர் பல்விதமாக பகர்வர். स एक: (तैत्रॆय) तस्य वाचक: प्रणव:
ॐ असतो मा सद्गमय । तमसो मा ज्योतिर्गमय । मृत्योर्मा अमृतं गमय । ॐ शान्तिः शान्तिः शान्तिः ॥

OM..Sa Ekaha

एकम् सत्यम् . विप्रा: बहुधा वदन्ति
Truth is Unity. Scholars describe in many ways.
அவன் ஒருவனே. படித்தவர் பல்விதமாக பகர்வர்.
स एक: (तैत्रॆय) तस्य वाचक: प्रणव:
He is One (Taitreya Upanishad)
(And) His Verbal form is Pranavaha
===========================
पठत संस्कृतं वदत संस्कृतं
लसतु संस्कृतं चिरं गृहे गृहे च पुनरपि




A centre of Prayer and Meditation. இது ஒரு தியான மையம். இறைவ்னின் சன்னிதானம்.

A centre of Prayer and Meditation.   இது  ஒரு தியான மையம்.  இறைவ்னின் சன்னிதானம்.
Ganapathi Yanthra

THIS BLOG IS DEVOTED TO ORTHODOX, VEDIC CULTURE,TRADITIONS AND PHILOSOPHY OF HINDUISM

ஸத்யம்
சிவம்
சுந்தரம். .
ஆன்மீகம்
Satyam Shivam Sundaram
Aanmeekam

Peace resides in love of God.





Sunday, March 30, 2008

Chapter 2. Naradha Starts Replying to Sage Valmiki

எல்லா உலகங்களிலும் உள்ள எல்லா பிராணிகளுடைய உண்மை உருவம் சுபாவங்கள் அனைத்துமே நன்று அறிந்த நாரத பகவான் வால்மீகி மொழியக்கேட்ட இந்தக் கேள்விதனை கேட்டது மட்டுமல்ல, வால்மீகியின் மனதிலுள்ள கருத்துக்களை நன்கு ஊகித்தும் தெரிந்து கொண்டு, இந்தக் கேள்விக்கு நான் பதில் சொல்லி அதனை இவர் கேட்கும்படியான பாக்கியம் வால்மீகிக்குக் கிட்டியுருப்பது குறித்து சந்தோஷமும் அடைந்தார். தம் மனதைத் தன் மனதில் எழும் வார்த்தைகளில் இணைத்து சொல்லத்துவங்கினார்:

ஓ ! வால்மீகி மஹ ரிஷியே ! சொல்லுகிறேன். கேளுங்கள் .

ஓ வால்மீகி மஹ ரிஷியே ! நீங்கள் விவரித்த குணங்கள் யாவையுமே ஒவ்வொன்றும் தனித்தனியே அனேக
இணை குணங்களை விளைக்கத் தக்கவை ஆகும். இந்த குணங்கள் சாதாரண ஜீவர்களிடம் (ஒன்றே சேர ) இயலாதவை. ஆஹா ! நான் இப்போது ராமனின் குணங்களை அல்லவா நினைந்து அனுபவித்து அதில் மகிழ்ச்சியும் அடைந்தவனாக பரவசமுற்றவனாகி இருக்கிறேன். சற்றே பொறுத்து இருங்கள். இன்னமும் யோசிக்கிறேன். இக்குணங்கள் யாவற்றையுமே ஒருமித்துக் கொண்ட ஜீவனை நான் சொல்கிறேன்.

இதோ ! இக்ஷ்வாகு வம்சம். இந்த வம்சத்தில் ஸ்ரீ ராமன் எனும் பிரசித்தி பெற்ற ஒருவர் அவதரித்து இருக்கிறார். நீங்களும் அவரைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். பொது மக்கள் யாவருமே இவரது பெருந்தொழிலை அவர்
செய்துவரும் அனேக காரியங்களைக் கண்டு இவர் ஸ்ரீமன் நாராயணன் என்பது நிச்சயம் என்கிறார்கள். இவர் கருமமே கண்ணானாராகி அதிஹேயமான பிறப்பு இறப்பு எனப்படும் விகாரங்கள் அற்றவர். பெரிதும் சாமர்த்தியசாலியானவர். (தான் செய்யும் கருமங்களால்) ஸ்வயம் பிரகாசமாகி இருப்பவர். உயர்ந்த நிலை
ஆனந்தத்தை உடையவர். தனது கருமங்களால் எல்லா மக்களையும் தன் வசமாக்கிக் கொண்டவர்.

எல்லாம் அறிந்தவர். அந்தந்த சமூக சம்பிரதாயங்களை மாற்றாமல், அவற்றின்படியே அவைகள் நடந்திர வேண்டி நடப்பிக்க வல்லவர். நல்ல வாக்கு உடையவர். பரந்த ஐச்வர்யத்தை உடையவர். அதற்கு ஏற்படும் விரோதிகளைப் போக்க வல்லவர். பருத்த உருண்ட கைகளை உடையவர். உயர்ந்த தோள்களை உடையவர். சங்கு போல மூன்று
ரேகைகளைக் கொண்ட கழுத்தை உடையவர். நீண்டு பருத்த கபோலங்களை உடையவர்.

பரந்த மார்பை உடையவர். பெரும் வில்லைப் பிடிக்கவல்ல உடல் ஆகிருதிதனி உடையவர். மறைந்த கழுத்து எலும்புகளை உடையவர். சத்ருக்களைப் போக்குபவர். முழந்தாள் அளவுக்கு நீண்ட கைகளை உடையவர். பருத்து வட்டமாயுள்ள தலை உடையவர். பாதி சந்திரன் போன்ற நெற்றி உடையவர். இவரது நடையோ அழகியதாம்.

அதிக நீண்டுமில்லாமல், அதிக குறைந்துமில்லாத சமமான ஒரு மேனி உடையவர். குறுமை, நெடுமை ஒன்றோடு ஒன்று சேராது பிரிந்து காணப்படும் அவயவங்களை உடையவர். இவரைக் காண ஆவல் அதிகமாக‌
உறுத்தும் நிறமுடையவர். ஜொலிக்கும் வசீகர காந்தி உடையவர். அகல மார்பினை உடையவர். நீண்ட கண்களை உடையவர். இவரது எல்லா அவயவங்களுமே அழகுடையவை. இவை எல்லாவற்றினையும் தவிர‌
இன்னும் பல பல லக்ஷணங்களையும் உடையவர் ஆவர்.

அறம் அறிந்தவர். சொன்ன சொல் தவறாதவர். பிராணிகளுக்கு நன்மை செய்ய ஆவல் உள்ளவர். நற்கீர்த்தி உடையவர்.ஊஹா போஹம் எனச் சொல்லப்படும் விசித்ர அறிவினை இவர் முற்றிலும் அறிவார். பரிசுத்தமானவர். தம் அடியவர்களுக்கு வசப்பட்டவர். அவர்கள்தம் நலனிலே அக்கரை காட்டுபவர். அதிலேயே
சிந்தை கொண்டவர்.

பிரும்மாவை ப்போன்றவர். மூன்று மூர்த்திகளில் ஒன்றாக அவதரித்தவர். இலக்குமியின் கணவர். அடியார்கள் எல்லோரையும் ஆதரிப்பவர். அவர்களுடைய விரோதிகளைப் போக்குபவர். சத்ரு மித்ர வித்தியாசம் பாராட்டாது எல்லோரையும் காப்பவர். அனைவரையும் அவரவருக்கு ஏற்ற தர்மங்களில் இருத்துபவர்.

தமது தர்மங்களை இடைவிடாது கடைப்பிடிப்பவர். தமது சுற்றத்தினையும் பொறாமை இன்றி காப்பாற்றுபவர். நான்கு வேதங்களான ருக், யஜுர், சாம, அதர்வணம் அறிந்தவர். வியாகரணம் சிக்ஷை, சந்தஸ், நிருக்தம், ஜ்யோதிஷம், கல்பம் என்ற ஆறு அங்கங்களையும் நன்றே அறிந்தவர். தனுர் வேதத்தில் பொருந்தியிருப்பவர்.

நியாயம், மீமாம்சம் போன்ற எல்லா சாத்திரங்களின் உண்மைதனையும் அறிந்தவர். அறிந்ததை என்றும்
மறவாதவர். காலத்திற்கேட்ப ஸப்பூர்த்தி எனச் சொல்லப்படும் அறிவினைப்பெற்றவர். எல்லாப் பிராணிகளுக்கும் பிரியமானவர். அவர்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றுபவர். தீநஸ்வபாவம் இல்லாதவர். வாக்கு சாதுர்யம் மிக்கவர்.

ஆறுகள் தங்களுக்கு போக்கற்று கடலைச் சேர்வன போல், எல்லா மக்களாலும் சூழ்ந்து காணப்படுபவர்.
எல்லோராலும் பூஜிக்கப்படுபவர். சாதி முதலிய எந்த வித்தியாசமும் இன்றி எல்லாராலும் அண்டத்தக்கவர்.
எப்போது பார்த்தாலும் புதியவராகத் தோற்றமளிப்பவர்.

கெளசலையின் குமாரர் இவர். இப்படி எல்லா நல்ல குணங்களையும் தன்னிடத்தே பொருந்தியவர்.
கடல் எப்படி தன்னுள் உள்ள மணிகள் ஆகியவற்றை பிறருக்குத் தெரியாமல் மறைக்கிறதோ அது போல இவரும்
பிறர் அறியவல்லாத மனோபாவமுடையவர். எவ்வாறு இமய மலை எந்த ஒரு மழையினாலும் அசையாதோ , அப்படியே எந்தவித துன்பங்கள் நேரிடினும் சலியாதவர்.

ஸ்ரீ விஷ்ணுவைப் போன்ற பராக்ரமசாலி. சந்திரனைப் போன்று மகிழ்ச்சியானவர். பிரளய காலத்து அக்னி போலவும் கோபமுடையவர். பொறுமையில் பூமிதனை ஒத்தவர்.

கொடையில் குபேரனை ஒத்தவர். உண்மையில் இவர் தர்ம தேவதை போன்றவர்.

....to be continued.

Every day a chapter (or part thereof) of Sankshepa Ramayana as revealed by Naradha to Sage Valmiki
is being posted.
Viewers are advised to read from the beginning.
Best Suited for nithya paraayana.

View of a Viewer:

எத்தனையோ இடர் வரும்போது ஸ்ரீராமாயணமே காக்கிறது. நீங்கள் ,சம்க்ஷேப ராமாயணமாகவே கொடுத்துவிட்டால் பாராயணம் எளிதாகிறது.
நன்றி.

ராம நாமம் எல்லா இடத்திலும் ஒலிக்கட்டும்.



*****************************************************
‌A link to Valmiki Ramayana (in both Sanskrit, transliteration and translation is given on the right side ) . Viewers who wish to view the corresponding Kanda/Sarga can get linked.